Thursday, February 24, 2011

சுமங்கலி திட்டம் என்னும் கொத்தடிமை கொடுமை

ஈரோடு, மதுரை ,விருதுநகர், தாராபுரம், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை முதலாளிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நமது இளம் தலைமுறை பெண்கள் தான். 12 முதல் திருமணம் ஆகும் வரை இருக்கும் பெண்களை  இந்த திட்டத்திற்கு தரகர்கள் மூலம் கிராமப்புரங்களில்  இருந்து தெரிவு செய்து அவர்களை கொத்தடிமைகளாக தொழிற்சாலைகளிலே தங்க வைத்து சுரண்டும் கொடுமை இங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மிகக்குறைந்த தொகைக்கு 4 வருடகாலம் வரையிலும் ஒப்பந்தம் போடும் முதலாளிகள், அந்த ஒப்பந்த காலத்திற்கு முன்பே அவர்களை எதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றும் சதியை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றன.  அதை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் அம்பலப்படுத்தி அரசை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய பொறுப்புணர்வுள்ள தொழிற் சங்கங்கள் முதலாளிகளிடம் கமிசன் வாங்கிகொண்டு தூங்கி கொண்டுள்ளது.

தொழிலாளர் கட்சி என்று சொல்லி கொண்டுள்ள CPI , CPI (M ) போன்றவை ஜெயலலிதாவுடன் தேர்தல் பேரம் பேசிக்கொண்டுள்ளன. படிக்க வேண்டிய இளம் பிஞ்சுகள் இவ்வாறு சொல்லென  துன்பங்களை தாங்கி கொண்டு வேலை செய்வது நமது அறிவி ஜீவிகளின் காதுகளுக்கு எட்டவே எட்டாது .  சுமங்கலி திட்டத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்துவதும் , அதில் மாட்டிக்கொண்டுள்ள தொழிலாளிகளை மீட்டெடுப்பதும்  ,உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் நமது கடமையாகும்.

108 அம்புலன்ஸ் - தொழிலாளர்களை பாடு படுத்தும் அரசு


108  ஆம்புலன்ஸ் என்பது 'மக்களின் உயிர் காக்கும் தோழன்' என்று அரசு விளம்பரப்படுத்துகிறது ஆனால் அந்த தோழர்களின் வாழ்க்கையை எப்போதும் இருண்ட பக்கமாகவே   வைத்திருக்கிறது அதில் வேலை செய்பவர்களுக்கு  ஆள் எடுக்கும் போது கொடுத்த எந்த உறுதியையும் காப்பாற்றவில்லை. 12  மணி நேரம் வேலை ,  ஒ.டி. இல்லை என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற கொடுமைக்களை 108 அம்புலன்ஸ் நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இழைக்கிறது. அந்த கொடுமைகளை  நாம்  எதிர்த்து குரல் கொடுப்போம். 

தமிழகத்தை சேர்ந்த முருகையா லிபிய படைகளால் கொல்லப்பட்டார் - மற்ற தமிழர்களின் நிலையும் அபாயகரமாகவே உள்ளது

திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா  லிபிய நாட்டில் கடாபியின் ஏவுதலால் ராணுவம்  நடத்திய  காட்டுமிராண்டி தனமான  தாக்குதலில் உயிர் இழந்து உள்ளார்.முருகையா உள்ளிட்ட 26 இந்தியத் தொழிலாளர்களை, தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், லிபிய நாட்டில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்காக அமர்த்தி உள்ளது.அவர்கள் ஏற்கனவே அங்கு அபாயகரமான் சூழ்நிலையில் பனி செய்து வருகின்றனர். தற்போது கடாபியின் கொடுகோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர், கடாபியும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளான் .  பிப்ரவரி 22 ஆம் நாள் லிபிய அரசுப் படைகள் தொழிலாளர்கள் தங்கிய இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் வெளியேற முயன்றபோது, திடீரென ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்து உள்ளார். 

இந்தத் தகவலை, லிபியாவில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.ஆனால் லிபிய அரசு இந்த உண்மையை மறைத்து முருகையா விபத்தில் இறந்தார் என்று கூறி உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையும் அதை ஏற்றுக்கொண்டு, முருகையா விபத்தில் இறந்ததாகவே கடாபியின் வாசகத்திற்கு ஒத்து ஊதுகிறது.முருகையாவின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற தமிழர்களும் பத்திரமாக மீட்க்கபடவேண்டும்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான பணிப்பாதுகாப்பு வேண்டும்

பெருநகரங்களில் தங்கி வீட்டு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலனவர்கள் திருமணமாகாத 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களே. அவர்களுக்கு வேலை நேரம் என்பது காலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை என எந்த ஈவு இரக்கமும் இன்றி சுரண்டப்படுகின்றனர். அதற்கு அவர்களுக்கு சம்பளமாக ரூ.2 ,000 /-ற்கு  குறைவாகவே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சரியான உணவு தரப்படுவதில்லை மீதம் இருக்கும் உணவோ அல்லது பழையதோ தான் அவர்களுக்கு உணவாக தரப்படுகிறது. அவர்கள் வரைமுறை இல்லாமல் மாட்டை விட அதிகமாக வேலை வாங்குகின்றனர். திருட்டு பட்டம் எளிதில் அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது,அதுமட்டுமில்லாமல் அவர்கள் பெரும்பாலனவர்கள் இளம் பெண்கள் என்பதால் அவர்கள் உரிமையாளர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், அதை எதிர்ப்பவர்களை திருட்டு குற்றம் சுமத்தி அடித்து வெளியேற்றுவதும் நடைபெறுகிறது .இது போல் பணியாற்றும் பெண்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாத  குக்கிராமங்களை சேர்ந்தவர்கள் , அவர்களுக்கு சட்டப்படி பணிப்பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை ஆகும் , அனால் அரசு ஏழைகளின் குரலுக்கா மதிப்பு கொடுக்கும். இது போல பாதிக்கப்படும் அபலை பெண்களின் பணிப்பாதுகாப்புக்கும்   , உயிர் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுக்க நாம் ஓன்று பட்டு குரல் எழுப்ப வேண்டும். அந்த உழைக்கும் மகளிரின் உரிமைக்கு கரம் கொடுப்போம். அவர்களின் மீது காட்டுமிராண்டி தனமாக கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு எதிர்த்து போராடுவோம்.

Wednesday, February 9, 2011

நீதித் துறை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்


ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள பெருமளவு வித்தியாசத்தை சரிபடுத்தக் கோரி மாவட்டத்தில் நீதித் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை (பிப். 10) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.  மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலர் ஜி. சீனிவாஸ், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஜி. ரகுநாதன், எஸ். பாபுஜி சிவப்பிரகாஷ், எஸ். திப்பு, இணைச் செயலர்கள் ஏய பிரேமா, வி.பி. சண்முகசுந்தரி, கே. சேதுராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்க மாநில மையத் தீர்மானப்படி நீதியரசர் கே. ஜெகநாத் ஷெட்டி அளித்த பரிந்துரையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  6-வது ஊதியக்குழுவில் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை சரிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை (பிப். 10) மாவட்ட நீதித் துறை அனைத்து ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

Tuesday, February 8, 2011

108 அம்புலன்ஸ் - தொழிலாளர்களை பாடு படுத்தும் அரசு


108  ஆம்புலன்ஸ் என்பது 'மக்களின் உயிர் காக்கும் தோழன்' என்று அரசு விளம்பரப்படுத்துகிறது ஆனால் அந்த தோழர்களின் வாழ்க்கையை எப்போதும் இருண்ட பக்கமாகவே   வைத்திருக்கிறது அதில் வேலை செய்பவர்களுக்கு  ஆள் எடுக்கும் போது கொடுத்த எந்த உறுதியையும் காப்பாற்றவில்லை. 12  மணி நேரம் வேலை ,  ஒ.டி. இல்லை என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற கொடுமைக்களை 108 அம்புலன்ஸ் நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இழைக்கிறது. அந்த கொடுமைகளை  நாம்  எதிர்த்து குரல் கொடுப்போம்.