கடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
Showing posts with label இயக்கம். Show all posts
Showing posts with label இயக்கம். Show all posts
Sunday, August 28, 2011
Friday, March 11, 2011
ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்
இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும்
அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும் மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போல வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.
Thursday, February 24, 2011
தமிழகத்தை சேர்ந்த முருகையா லிபிய படைகளால் கொல்லப்பட்டார் - மற்ற தமிழர்களின் நிலையும் அபாயகரமாகவே உள்ளது
திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா லிபிய நாட்டில் கடாபியின் ஏவுதலால் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் உயிர் இழந்து உள்ளார்.முருகையா உள்ளிட்ட 26 இந்தியத் தொழிலாளர்களை, தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், லிபிய நாட்டில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்காக அமர்த்தி உள்ளது.அவர்கள் ஏற்கனவே அங்கு அபாயகரமான் சூழ்நிலையில் பனி செய்து வருகின்றனர். தற்போது கடாபியின் கொடுகோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர், கடாபியும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளான் . பிப்ரவரி 22 ஆம் நாள் லிபிய அரசுப் படைகள் தொழிலாளர்கள் தங்கிய இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் வெளியேற முயன்றபோது, திடீரென ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்து உள்ளார்.
இந்தத் தகவலை, லிபியாவில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.ஆனால் லிபிய அரசு இந்த உண்மையை மறைத்து முருகையா விபத்தில் இறந்தார் என்று கூறி உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையும் அதை ஏற்றுக்கொண்டு, முருகையா விபத்தில் இறந்ததாகவே கடாபியின் வாசகத்திற்கு ஒத்து ஊதுகிறது.முருகையாவின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற தமிழர்களும் பத்திரமாக மீட்க்கபடவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)


