Wednesday, February 9, 2011

நீதித் துறை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்


ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள பெருமளவு வித்தியாசத்தை சரிபடுத்தக் கோரி மாவட்டத்தில் நீதித் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை (பிப். 10) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.  மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலர் ஜி. சீனிவாஸ், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஜி. ரகுநாதன், எஸ். பாபுஜி சிவப்பிரகாஷ், எஸ். திப்பு, இணைச் செயலர்கள் ஏய பிரேமா, வி.பி. சண்முகசுந்தரி, கே. சேதுராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்க மாநில மையத் தீர்மானப்படி நீதியரசர் கே. ஜெகநாத் ஷெட்டி அளித்த பரிந்துரையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  6-வது ஊதியக்குழுவில் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை சரிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை (பிப். 10) மாவட்ட நீதித் துறை அனைத்து ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment